முன்னாள் எம்எல்ஏவை கடத்திய வழக்கு மாஜி அதிமுக பிரமுகர் குண்டாசில் கைது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன்(45). அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த 2016 முதல் 2021 வரை பவானிசாகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். கடந்த ஆக.24ம் தேதி பவானிசாகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று அடித்து உதைத்து ரூ.1.50 கோடியை  பறித்து சென்றதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். காயமடைந்த முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது புகாரின்படி சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன் (அரியப்பம்பாளையம் முன்னாள் அதிமுக அம்மா பேரவை செயலாளர்), மோகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு கலெக்டர் மற்றும் எஸ்பி பரிந்துரையின் பெயரில் முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன், மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: