சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்.சுதன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சமக்ரா சிக்ஷா என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனராக ஆர்.சுதன் இருந்து வந்தார். இவர் பள்ளிக்கல்வித் துறையில் பவ்லேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தவர். பள்ளிக்கல்வி செயல்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினார். அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களின் டிஜிட்டல் வருகைப் பதிவை கொண்டு வந்தார். இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்.சுதன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.