திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் திருமலைக்கு வந்தனர். நேற்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று ரஜினிகாந்த் தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் ரஜினிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேதாசீர்வாதம் செய்து வைத்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றுள்ளதற்காக அவருக்கு வாழ்த்துகள்.