பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சிகிச்சைக்காக மக்கள் கூட்டம் மருத்துவமனைகள் முன்பு அலைமோதுகிறது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதால் அனைத்து கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பீஜிங், சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் மருத்துவமனைகள் முன்பு சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.