கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக, சுருளி அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு இரண்டாம் நாளாக இன்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் சுற்றுலா தலமாகவும், புணித தலமாகவும் உள்ளது சுருளி அருவி. மேலும் இங்குள்ள கோயில்கள் பிரசித்தி பெற்றவை. இதன் காரணமாக இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் தினமும் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால், சபரிமலையிலிருந்து ஊருக்கு திரும்பும் ஐயப்ப பக்தர்களும் சுருளி அருவிக்கு அதிகளவில் வருகின்றனர்.