சென்னை : உலகின் தலைசிறந்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி சாம்பியன் வேண்டும் என்பதே செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அண்மையில் மாமல்லபுரத்தில் நடத்திய 4-வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணியில் இடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்ற குகேஷுக்கு அவர் படிக்கும் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பத்ம விபூஷன் விருது பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பள்ளி நிர்வாகம் சார்பில் அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கி கவுரவித்தார்.