ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் மறைவு: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அஞ்சலி

சென்னை: உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் நேற்று காலமானார். ஐகோர்ட் நீதிபதியாக 1994 முதல் 2004 வரை பதவி வகித்து வந்தவர் பி.சண்முகம். ஓய்வு பெற்றதற்கு பிறகு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் பொறுப்பு துணை தலைவராக பதவியேற்றார். இவர் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரம் ஆகியவற்றை விசாரிக்கும் ஒரு நபர் கமிஷனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அவரது இறுதி சடங்கு இன்று பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறவுள்ளது.

Related Stories: