மணலி மண்டலத்திற்குட்பட்ட சி.பி.சி.எல். நகர் எரிவாயு தகனமேடை பராமரிப்புப் பணி காரணமாக மூடல்

சென்னை: மணலி மண்டலத்திற்குட்பட்ட சி.பி.சி.எல். நகர் எரிவாயு தகனமேடையில்பராமரிப்புப் பணிகள் காரணமாக மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட சி.பி.சி.எல். நகரில் செயல்பட்டு வரும் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்  15.12.2022 முதல் 15.02.2023 வரை  இயங்காது. எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் மாதவரம் மண்டலம், காமராஜர் சாலை, சாஸ்திரி நகரில் செயல்பட்டு வரும் எரிவாயு தகனமேடையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories: