சென்னை: அம்பேத்கருக்கு திருநீறு இட்டு அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். திருவள்ளுவர், பெரியாரை தொடர்ந்து அம்பேத்கருக்கும் திருநீறு இட்டு அவமதிப்பு செய்த சங்பரிவார் சனாதன அமைப்புகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கொட்டும் மழையிலும் பங்கேற்று உரையாற்றினார். இந்துத்துவா என்பது பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் அரசியல் விளையாட்டு என்று அவர் விமர்சித்தார்.