பெங்களூர்: ஜி-20 அமைப்பின் முதலாவது நிதி மற்றும் ஒன்றிய வங்கி பிரநிதிகள் கூட்டம் பெங்களூரில் நாளை துவங்குகிறது. ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை தொடர்ந்து ஜி 20 நிதி மற்றும் ஒன்றிய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் நாளை துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. நிதி மற்றும் வங்கி பிரதிநிதிகளின் கூட்டத்தில் ஒன்றிய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் , ரிசர்வ் வங்கி துணைஆளுநர் டாக்டர் மைக்கேல் டி. பத்ரா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.