பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 10,000 கனஅடி நீர் திறப்பு!

சென்னை: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 5,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் 60 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூண்டி நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் இருந்து தற்போது 34.43 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Related Stories: