அதிமுக கோவை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அதிமுக கோவை புறநகர் மாவட்ட நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அதிமு கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் செந்தில் பி.கார்த்திகேயன் தலைமையில் காளப்பட்டி பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் பி.விஜயகுமார், 7வது வார்டு பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கலைமணி, 23வது வார்டு என்.ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப அணி 7வது வார்டு செயலாளர் ஜே.மகேஷ்குமார், கே.ஆர்.கார்த்திகேயன் மற்றும் எஸ்.மகேஷ், பி.சந்திரசேகர், என்.ஆறுமுகம், எஸ்.சுந்தரவடிவேல்(எ)அப்பு, ஆர்.துரைசாமி, எம்.நடராஜ், பி.பிரவின்குமார், பி.ரவிகுமார், ஏ.குணசேகர், கே.கௌதம், பி.ரங்கராஜ், ஏ.ஜெயகாந்த், வி.அருண்குமார், சி.ஹரிஸ்சோமு, எம்.சக்திவேல், எம்.பிரகாஷ், வி.நாகராஜ் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனர்.

அப்ேபாது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: