மாண்டஸ் புயல் காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: பல்கலை கழகம் அறிவிப்பு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை கழகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி - ஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயலின் காரணமாக நேற்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் புயல் கரையை கடந்தும் அதன் தாக்கம் இன்றும் இருக்கும் என்ற காரணத்தினால் இன்று நடைபெற இருந்த தேர்வுகளையும் ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: