டெல்லி: மாநிலங்கள் அவைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நாடாளுமன்றம் நேற்று கூடியது. மாநிலங்கள் அவைத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜக்தீப் தங்கரை பாராட்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவாதம் நடக்கும் போதெல்லாம், பெரிய கட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கற்களான மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி ஆகியவற்றைப் பாதுகாக்க சிறிய கட்சிகளுக்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இன்று மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிட்டது; சமூக நீதி கேள்விக்குறியாக மாறியுள்ளது.