வாஷிங்டன்: ``இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் தர தொடர்ந்து வலியுறுத்துவோம்,’’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் மதங்களை பின்பற்ற மக்களுக்கு சுதந்திரம் அளிக்கின்றனவா? மாறாக, கொடுமைபடுத்துதல், சிறை தண்டனை, கொலை ஆகியவற்றில் ஈடுபடுகிறதா என்பதை அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் கண்காணிக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரத்தை பட்டியலிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பட்டியலில் இருந்த இந்தியா தற்போது `கவலைக்குரிய நாடுகள்’ பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது.