பிரபல ஓவியரும் எழுத்தாளருமான மனோகர் தேவதாஸ் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ‘பத்ம’ மனோகர் தேவதாஸ் (86), விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். கோயில் பகுதிகள், வீதிகள், புகழ்வாய்ந்த கட்டிடங்கள், வைகை ஆறு, இயற்கை எழில் கொஞ்சும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் என மதுரை மண்ணின் அடையாளங்களை மிக அழகாக தீட்டியதால் மனோகர் தேவதாஸ் மதுரையின் ஓர் அடையாளமாகவே மாறிப்போனார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தபோது கூட, மனோகர் தேவதாசின் Multiple Facets of Madurai என்ற நூலினைத்தான் நான் அன்பளிப்பாக வழங்கியிருந்தேன். அவரின்மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள கலைத்துறை நண்பர்கள், உறவினர்கள்அனைவருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: