சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ‘பத்ம’ மனோகர் தேவதாஸ் (86), விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். கோயில் பகுதிகள், வீதிகள், புகழ்வாய்ந்த கட்டிடங்கள், வைகை ஆறு, இயற்கை எழில் கொஞ்சும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் என மதுரை மண்ணின் அடையாளங்களை மிக அழகாக தீட்டியதால் மனோகர் தேவதாஸ் மதுரையின் ஓர் அடையாளமாகவே மாறிப்போனார்.