உடுமலை: நகராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னையால் உடுமலையில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடுமலை நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மற்றும் பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவலிங்கம் லேஅவுட் ஆகியவை நகராட்சி, ஊராட்சியின் எல்லை பகுதியாக உள்ளன. இப்பகுதியில் நகராட்சி பகுதியில் இருந்தும், ஊராட்சி பகுதியில் இருந்தும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது.