தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள்!

சென்னை: தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு  பயிற்சி  வகுப்பில் சேர 12.12.2022 முதல் 19.12.2022 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின்  கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, பள்ளிகளில் பயின்ற  மாணவ மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு (2022-23) பயிற்சிக்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் (பொ) தொ.நோ.ம.மனை.எண்.187 திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில்   12.12.2022 முதல்  19.12.2022 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21.12.2022  மாலை 5.00 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: