சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கேரளாவை சேர்ந்த பிரபல சினிமா நடிகை பார்வதி நாயர் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நியைத்தில் நேற்று முன்தினம் தனது வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் மீது புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன் வீட்டில் பணியாற்றிய சுபாஷ் சந்திரபோஸ், என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யூடியூப் சேனல்களில், தான் வீட்டில் ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்தாகவும், அதை அவர் பார்த்ததால் அவர் மீது நான் திருட்டு பட்டம் கட்டியதாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.