டெல்லி: 26 வயதாகும் பெண்ணின் 33 வார கருவை கலைக்க அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங் கருத்து கூறியுள்ளார். கருவை கலைக்க மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும் பெண்ணின் கோரிக்கையை ஏற்று டெல்லி ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.