குமரி: குமரியில் முறையாக வடிகால் அமைக்க கோரி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக - கேரள எல்லை பகுதியான செரியகொள்ளா கிராமத்தில் முறையான வடிகால் இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாஜகவினருக்கும், கேரள போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.