கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தினமும் லாரிகளில் பூக்கள் வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு கிலோ மல்லி ரூ.1,300க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும், முல்லை ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், சாமந்தி ரூ.100க்கும், சம்பங்கி ரூ.60க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100க்கும், அரளி ரூ.200க்கும்  விற்பனையானது. இந்நிலையில், நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.2000க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை ரூ.900க்கும், ஜாதி மல்லி ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.800க்கும், சம்பங்கி ரூ.300க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும், அரளி 200க்கும், சாமந்தி ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இதுபற்றி பூ மார்க்கெட் சங்க தலைவர் மூக்காண்டி கூறும்போது, ‘‘இன்று மற்றும் நாளை முகூர்த்த நாள் என்பதால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மடங்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள் முடிந்தவுடன் பூக்கள் விலை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திகை தீபம் என்பதால் சாமந்தி, பன்னீர் ரோஸ், சாக்லெட் ரோஸ் ஆகிய பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

Related Stories: