கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சி ஏச்சம் வயல் பகுதியில் வசிப்பவர் ராஜூ கூலித் தொழிலாளி. இவரது மகள் சுசீலா (18). கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், அங்குள்ள ஜவுளிக்கடையில் பகுதி நேர வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். புத்தூர் வயல் பகுதிக்கு முன்பு உள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் சென்றபோது, சாலை ஓரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென ஸ்கூட்டர் மீது பாய்ந்தது.