தூத்துக்குடி அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது; போலீசார் விசாரணை..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (26) என்பவரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 29ல் வேலைமுடிந்து நடந்து சென்ற முருகேஸ்வரியிடம் பைக்கில் வந்த 2 பேர் செல்போனை பறித்துச் சென்றனர். முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் அருள் முத்துமணி (24), மணிகண்டன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: