சென்னை: மேட்டுப்பாளையத்தில் உயர்நிலை பள்ளி எதிரே அறிவுசார் மையம் அமைக்கப்படுவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சியில் 1.87 கோடி ரூபாய் செலவில் மாணவர்களுக்கு பயன்படக் கூடிய அளவில் அறிவுசார் மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த கட்டிடத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள மணி நகர் நகராட்சி உயர்நிலை பள்ளி எதிரே அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உயர்நிலை பள்ளி அருகே அறிவுசார் மையம் அமைப்பதற்கு பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வீரகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.