சென்னை: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடப்பு 2022-2023ம் ஆண்டில், சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில், இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில், சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்ய டிசம்பர் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.