சென்னை: தரமணி மயான பூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், 20 நாட்களுக்கு வேளச்சேரி மயானபூமியை பயன்படுத்த சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம் தரமணி 100 அடி சாலை, பாரதி நகரில் உள்ள மயான பூமியில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.