சென்னை: தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவை தமிழத்தில் உள்ள ேபாக்குவரத்து கழகத்தின் 6 கோட்டங்களுக்கு வழங்கப்படும்.
தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக சட்டப்பேரவையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும் மற்றும் 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும் 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பினை வெளியிட்டார். இதனிடையே, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் பேருந்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு நாளொன்றுக்கு 1 கோடியே 70 லட்சம் பயணிகளாக இந்தாண்டு உயர்ந்துள்ளது.