கான்பூர்: போலி ஆதார் அடையாள அட்டையை காட்டி ெடல்லியில் இருந்து மும்பை சென்ற சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கி பயணம் செய்தார். அவர், போலி ஆதார் அடையாள அட்டையை சமர்பித்து பயணம் செய்ததாக கூறி, கோவல்தாலி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளன். அவர் சமர்பித்த ஆதார் அட்டையில் அஷ்ரப் அலி என்பவரின் பெயரும், இர்ஃபான் சோலங்கியின் புகைப்படமும் இருந்தது.