பெரம்பூர்: பெரவள்ளூரில் பிரபல ஓட்டலில் வழங்கப்பட்ட கேசரியில் வண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருமங்கலம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தசரதராமன் (29). இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இவர் தனது நண்பர்கள் 8 பேருடன் பெரவள்ளூர் சிவஇளங்கோ சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் தசரதராமன் கேசரி ஆர்டர் செய்துள்ளார். அதை ஊழியர் கொண்டு வந்து கொடுத்தபோது அதில் வண்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.