மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராகிறார். நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே கடந்த 25ம் தேதி ஐகோர்ட்டில் ஆஜரான சுவாதி நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு ஒரே பதிலை அளித்தார்.