துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்து, காவல் நிலைய பதிவேடுகளை முறையாக பின்பற்றிய எழுத்தருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கினார். சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றச் சம்பந்தப்பட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், சமீபத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் என்ன மாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளார்கள் என்றெல்லாம் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார்.