கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து - இந்தியா மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி நடக்கிறது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையில் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் நியூசி. 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து 2வது ஆட்டம் மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது. நியூசி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 3வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியுடன் இந்தியா களமிறங்குகிறது.