ஐதராபாத்: நடிகர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலா ஜோடியாக வெளிநாடு டூர் சென்றுள்ளனர். நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, சமந்தா காதலித்து மணந்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டனர். பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் தோழி வானதியாக நடித்தவர் நடிகை ஷோபிதா துலிபாலா. இந்நிலையில் ஷோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக தகவல் பரவியது. இதை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு இந்த ஜோடி பறந்து சென்றுள்ளது.
