மதுரை : 2021-ல் தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.