சென்னை: சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளியான ஞானபிரகாசம் கொலை, கடத்தல், சட்ட விரோதமாக ஆயுதங்கள், வெடிபொருட்கள் வைத்திருந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெங்களூரு விசாரணை நீதிமன்றம், ஞானபிரகாசத்துக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2004ல் தீர்ப்பளித்தது. ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் கடந்த 2013ல் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 2014ல் தீர்ப்பளித்தது.