மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், குஜராத் டைடன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆஷிஸ் நெக்ரா கூறியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே சாம்சனை உட்கார வைத்துவிட்டு தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். நியூசிலாந்து மண்ணில் ஹூடாவால் சிறப்பாக பந்துவீச முடிகிறது. இதனை நாம், டி20 தொடரிலேயே பார்த்தோம். சாம்சனை முதல் போட்டியில் சேர்த்துவிட்டு, இரண்டாவது போட்டியில் பெஞ்சில் உட்கார வைப்பதால், அவரது மன உறுதி குறையும்.