தமிழகம் நெல்லையில் தனியார் சிமெண்ட் ஆலை வளாகத்தில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!: போலீசார் விசாரணை..!! Jun 23, 2021 நெல்லை நெல்லை சங்கர்... தின மலர் நெல்லை: நெல்லையில் தனியார் சிமெண்ட் ஆலை வளாகத்தில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சங்கர் நகரில் இயங்கி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால் மிகவும் குறைவான தொழிலாளர்களுடன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளர்கள் பலரை பணிநீக்கம் செய்தும் ஏராளமானோரை குறைந்த நாட்கள் மட்டுமே பணிக்கு வருமாறு ஆலை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் ஆலை வளாகத்தில் 5 இடங்களில் பைப் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் மர்மநபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர். புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் சம்பவ இடத்தில் அதிரடி ஆய்வு நடத்தி 2 பைப் வெடிகுண்டுகளை கண்டெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவற்றை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். … The post நெல்லையில் தனியார் சிமெண்ட் ஆலை வளாகத்தில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!: போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.
ஆக்ரோஷமான நாய் இறக்குமதி தடை விவகாரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் இறுதி முடிவு எடுக்க கூடாது: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மனு தள்ளுபடி: விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை தமிழ்நாட்டில் தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்: கனிமொழி எம்பி பேட்டி
மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி: அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெறும் விசிக: 8% வாக்குகளால் நாம் தமிழர் கட்சிக்கும் அங்கீகாரம்
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்து பரிதாபம்: கூட்டணி கட்சியான தேமுதிக 2 இடங்களில் டெபாசிட் காலி
சோதனை மேல் சோதனை; தொடர் தோல்வியால் அங்கீகாரம் இழந்த பாமக: பாஜ கூட்டணியில் 6 தொகுதிகளில் டெபாசிட் காலி
தமிழ்நாட்டில் போட்டியிட்ட 39 இடங்களிலும் படுதோல்வி அடைந்ததுடன் பாஜ கூட்டணி 21 இடங்களில் டெபாசிட் காலி: கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியானது