அப்போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், உரிய சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பது அல்லது சம்மனை ரத்து செய்வது வழக்கு விசாரணையை பாதிக்கும். எனவே, தற்போது எந்த தடை உத்தரவும் முடியாது. மனுதாரர்கள் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
The post ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மனு தள்ளுபடி: விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.