இந்துார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலுக்கு மத்தியில், ‘கட்சிக்காக கடினமான முடிவுகளையும் எடுக்க தயங்கமாட்டோம்’ எனக்கூறி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் சச்சின் பைலட்டை துரோகி என்று கெலாட் கூறினார். அதற்கு பதிலடியாக, என் மீது அவதுாறாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று பைலட் கூறினார்.