சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என பொது சுகாதாரம் இயக்ககம் தெரிவித்துள்ளது.