விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்: ஈரோடு ரசாயன ஆலையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு..!!

ஈரோடு: ஈரோடு ரசாயன ஆலையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு நடத்தினார். ஈரோட்டில் ரசாயன கழிவுகளை வெளியேற்றிய தனியார் இரும்பு ஆலை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. ரசாயன கழிவு வெளியேற்றப்படுவது தொடர்பாக நேற்று கோட்டாட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து செய்தியர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டிருக்கிறோம் என கூறினார்.

Related Stories: