பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு முன்னாள் டிஜிபி திரிபாதி விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்

விழுப்புரம்: தமிழகத்தில்   கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில்   ஈடுபட்டிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள்   சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, மற்றும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர்   மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு   விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.  பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை முடிவடைந்தநிலையில்,   அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை தொடங்கி நடந்து வருகின்றன.

இதனிடையே நேற்று வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வந்தது. அப்போது,   குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆகிய இருவரும் ஆஜரானார்கள். அதனைத்தொடர்ந்து, அரசு தரப்பு சாட்சியான தமிழக முன்னாள் டிஜிபி திரிபாதி   ஆஜராகி சாட்சியம் அளித்தார். பிற்பகல் வரை சாட்சியம் அளித்த நிலையில், அதன்பிறகு எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அவரிடம் குறுக்கு விசாரணை   மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: