சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலுக்கு தமிழகம் முழுவதிலிருந்து பக்தர்கள் சென்று வருவது வழக்கம். அந்தவகையில், தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் வசதிகாக ஐதராபாத் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் டிச.5ம் தேதி முதல் ஜன.9ம் தேதி வரை திங்கட்கிழமைதோறும் தமிழகம் வழியே இயக்கப்பட உள்ளது.ஐதராபாத்தில் இருந்து திங்கட்கிழமை மாலை 3.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்தநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 11.50 மணிக்கு கொல்லம் சென்றடையும்.