திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மெய்நிகர் நூலகத்தை வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார். திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே மாவட்ட கிளை நிர்வாகம் உள்ளது. இங்கு மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற பல்வேறு துறை சார்ந்த மாணவ, மாணவிகள், பட்டதாரிகள், தொழிலாளர்கள், கவிஞர்கள் போன்றவர்களுக்கு பயன்படும் வகையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைப்பில் நூல்கள் உள்ளன. தற்போது, நவீன தொழில்நுட்ப வசதியில் ஒரு இடத்திற்கு நாம் போகாமலே அந்த இடத்தை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் மெய்நிகர் என்ற 2 விசேஷ கருவிகளை திருவொற்றியூர் கிளை நூலகத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.