புதுடெல்லி: மியான்மர், கம்போடியா விற்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவு துறை தெரி வித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நிருபர்களிடம் கூறுகையில், ‘மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200 பேர் மியான்மரிலிருந்தும், 100 பேர் கம்போடியாவிலிருந்தும், 64 பேர் லாவோஸிலிருந்தும் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.