சென்னை தோட்டக்கலை சங்கம் பெயரில் உள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்த தடை இல்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சென்னை தோட்டக்கலை சங்கம் பெயரில் உள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்த தடை இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அண்ணா மேம்பாலம் ஒட்டிய அரசுக்கு சொந்தமான நிலம் தோட்டக்கலை சங்கம் என்ற பெயரில் வி.கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகரால் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்படுவதாக 1989-ல் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.

Related Stories: