சென்னை ஏ.டி.எம். டெபாசிட் இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது வங்கியின் கடமை!: SBI ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!! Jun 23, 2021 எஸ்பிஐ யூனியன் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தின மலர் சென்னை: ஏ.டி.எம். டெபாசிட் இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை வங்கிக்கு உள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் எஸ்.பி.ஐ., சி.டி.எம். இயந்திரங்களில் பணம் திருடப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்தார். தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து சி.டி.எம். இயந்திரத்தின் பாதுகாப்பை எஸ்.பி.ஐ. வங்கி மேம்படுத்த வேண்டும். ஏ.டி.எம்., சி.டி.எம். இயந்திரங்களின் செயல்பாடு, பணம் நிரப்புவது, அவுட்சோர்சிங் தருவதை கைவிட வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், வங்கிகளின் நேரடி பார்வையில் ஏ.டி.எம்., சி.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்ப வேண்டும் என தெரிவித்தார். எஸ்.பி.ஐ. வங்கிக்கு தமிழ்நாட்டில் 1233 பணம் டெபாசிட் இயந்திரங்கள் உள்ளன. 1,233 இயந்திரங்களில் சென்னையில் மட்டும் 300 சி.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இரவு நேரங்களில் ஏ.டி.எம்., சி.டி.எம். மையங்களில் காவலாளிகளை பணியமர்த்த வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதுவும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக உள்ள ஏ.டி.எம். மையங்களில் 24 மணி நேரமும் காவலாளி இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். கடந்த ஒரு வாரமாக எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களை குறித்துவைத்து வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். சுமார் 15 லட்சம் வரை நூதன முறையில் கொள்ளையர்கள் திருடியுள்ள சம்பவம் எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக காவல்நிலையத்திற்கு தொடர் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுகுறித்து போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம். பாதுகாப்பை உறுதி செய்வது வங்கியின் கடமை என்று பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. … The post ஏ.டி.எம். டெபாசிட் இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது வங்கியின் கடமை!: SBI ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!! appeared first on Dinakaran.
அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே
மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு.. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அலாரம் பொருத்தும் பணி தீவிரம்
அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி கிரைய பத்திரங்களை பெறலாம்: கலெக்டர் வேண்டுகோள்
மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணி செய்ய வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு கூட்டத்தில் அறிவிப்பு
தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு