சென்னை: அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கில், ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ்.செல்வகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்களின் வரிப்பணத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தில், கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிறுவன பதவி உயர்வு உள்ளிட்டவைகளிலும் விதி மீறல் நிகழ்ந்தது.