ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 3700 கோழிக்குஞ்சுகள் கருகி உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி வேடப்பட்டியை சேர்ந்தவர் மாது (45). அதே பகுதியில் கடந்த 2 வருடமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்றிரவு 10 மணியளவில் திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த மாது மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் அணைக்க முடியவில்லை.